ஜி.டி.பி., 5.1 சதவீதம் ‘கிரிசில்’ கணிப்பு
புதுடில்லி:தர மதிப்பீட்டு நிறுவனமான, ‘கிரிசில்’, நடப்பு நிதியாண்டுக்கான, ஜி.டி.பி., எனும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கணிப்பை, 5.1 சதவீதமாக குறைத்து அறிவித்துள்ளது.இந்நிறுவனத்தின் முந்தைய மதிப்பீட்டில், நடப்பு நிதியாண்டுக்கான வளர்ச்சி, 6.3 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கி, இன்றிலிருந்து, 5ம் தேதி வரை, அதன் நிதிக் கொள்கை கூட்டத்தை நடத்துகிறது. இக்கூட்டத்தின் முடிவில், வட்டி விகிதம் குறித்த அதன் முடிவை அறிவிக்கும். இந்நிலையில், கிரிசிலின் இந்த அறிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இது குறித்து, இந்நிறுவன அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:நடப்பு நிதியாண்டின் இரண்டாவது அரையாண்டில், வளர்ச்சி விகிதம், முதல் அரையாண்டிலிருந்த, 4.75 சதவீதத்தை விட அதிகரித்து, 5.5 சதவீதமாக உயரும்.
தொழில் துறை உற்பத்தி, வணிக ஏற்றுமதி, வங்கிகள் கடன் வழங்குவது அதிகரிக்காதது, சரக்கு போக்குவரத்து குறைவு, மின்சார உற்பத்தி சரிவு என பலவற்றில் சரிவு காணப்படுவதால், வளர்ச்சி விகித கணிப்பு குறைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு கிரிசில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.