நீர்மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு!
நீர்மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. 84 வீதம் வரை நீர்மட்டம் இவ்வாறு அதிகரித்துள்ளதாக மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார். இதன்காரணமாக நாளாந்த மின் உற்பத்தி 45 வீதம் வரை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கமைய, காசல் ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 94.6 வீதமாகவும், மவுசாகலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 91 வீதமாகவும், கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 86.8 வீதமாகவும் அதிகரித்துள்ளது. The post நீர்மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.