ரணிலை கலட்டிவிட்டு மஹிந்தவுடன் பிறந்த நாள் கொண்டாடி மைத்திரி!
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்றிரவு ஜனாதிபதி செயலகத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஏற்பாட்டிலேயே இந்தக் கொண்டாட்டம் இடம்பெற்றது.
இதில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் வெற்றிகரமாக முடிந்த பின்னர், ரணில் உட்பட குழுவினர் அங்கிருந்து சென்றதனை தொடர்ந்துa இந்த பிறந்த நாள் கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளதாக, அரசாங்கத் தரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், நேற்றைய அனைத்துக் கட்சிக் கூட்டம் முடிவுகள் ஏதுமின்றி முடிந்ததாக, அரச தரப்பு அமைச்சர்கள் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.