TGV : ஆயுதம் மூலம் அச்சுறுத்தல் விடுத்த இரு நபர்கள் கைது!!

PARIS TAMIL  PARIS TAMIL
TGV : ஆயுதம் மூலம் அச்சுறுத்தல் விடுத்த இரு நபர்கள் கைது!!

பரிசில் இருந்து மார்செ நோக்கி பயணித்துக்கொண்டிருந்த TGV தொடரூந்தில், நபர் ஒருவரும் அவரின் மகனும் சேர்ந்து பயணிகளை அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். 
 
கடந்த சனிக்கிழமை 21:35 மணி அளவில் இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது. Montereau-Fault-Yonne நகரைச் சேர்ந்த பயங்கரவாத தடுப்பி பிரிவினர் தொடரூந்தில் பயணித்துக் கொண்டிருந்துள்ளனர். அவர்களே இருவரையும் கைது செய்துள்ளனர். 57 வயதுடைய தந்தை ஒருவரையும், அவரின் 25 வயதுடைய மகனையும் Marolles-sur- Seine நகரில் தொடரூந்து தரித்து நின்ற போது இருவரையும் கைது செய்தனர். இருவரும் துப்பாக்கி ஒன்றை வைத்துக்கொண்டு பயணிகளை மிரட்டிக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அவர்கள் கைது செய்யப்படும் போது, தொடருந்தில் இருந்த சக பயணிகள் பலமாக கை தட்டினார்கள். இரண்டு ஆயுதங்களும் அவர்களிடம் மீட்கப்பட்டுள்ளது ஆயுதங்களில் ஒன்று 'அமெரிக்க பிஸ்டல்' துப்பாக்கி என்பதும் குறிப்பிடத்தக்கது. விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

மூலக்கதை