புரோ கபடி லீக் போட்டி பெங்காலை வீழ்த்தியது பாட்னா
பட்னா: புரோ கபடி லீக் போட்டியில், பெங்கால் அணியை 29-27 என்ற புள்ளிக்கணக்கில், வீழ்த்தி பாட்னா அணி வெற்றிபெற்றது. புரோ கபடி லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இதில், 12 அணிகள் விளையாடி வருகின்றன. பீகார் மாநிலம் பாட்னாவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பெங்கால் அணியும், பாட்னா அணியும் பலப்பரிட்சை நடத்தின.
ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது.
இரு அணிகளின் புள்ளிகள் சம நிலையில் இருந்து வந்த நிலையில், கடைசி நேரத்தில் பாட்னா அணி வீரர்கள் முழு திறமையும் வெளிப்படுத்தி விளையாடினர். இந்நிலையில், ஆட்டத்தின் முடிவில் பெங்கால் அணியை 29-27 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி பாட்னா அணி வெற்றிபெற்றது.
இது, இந்த அணியின் 4வது வெற்றியாகும்.
இன்றைய ஆட்டத்தில், தமிழ் தலைவாஸ் மற்றும் உத்தரபிரதேச அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன.
.