ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி கேரளா, ஜாம்ஷெட்பூர் ஆட்டம் டிரா

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி கேரளா, ஜாம்ஷெட்பூர் ஆட்டம் டிரா

ஜாம்ஷெட்பூர்:  ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில், கேரளா மற்றும் ஜாம்ஷெட்பூர் அணிகள் இடையே நடந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில்  முடிந்தது. இந்தியன் சூப்பர் லீக் (ஐ. எஸ். எல். ) கால்பந்து தொடரின் 22வது லீக் ஆட்டம் நேற்று ஜாம்ஷெட்பூரில் நடைபெற்றது. இதில், ஜாம்ஷெட்பூர் மற்றும் கேரளா அணிகள்  பலப்பரிட்சை நடத்தின.

இரு அணி வீரர்களும் சிறப்பாக விளையாடியதால், ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது. முதல் பாதியில் ஜாம்ஷெட்பூர் அணி ஆதிக்கம் செலுத்தியது.

அந்த அணி வீரர்கள் டிம் காஹில் 3வது நிமிடத்திலும், மிச்செல் சூசைராஜ் 31வது நிமிடத்திலும்  கோல் அடித்து அசத்தினர்.

இதனால், முதல் பாதியில் 2-0 என்ற கணக்கில் ஜாம்ஷெட்பூர் முன்னிலை பெற்றது.

பின்னர் சுதாரித்து கொண்ட கேரள அணி வீரர்கள்  ஆக்ரோஷமாக விளையாடினர். கேரளா அணி வீரர் லாவிஸ்லா 71வது நிமிடத்திலும், வினீத் 86வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

அதன்பின் இரு அணிகளும்  கோல் அடிக்கவில்லை. இதையடுத்து ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

டெல்லி, நேரு ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி மற்றும் நார்த் ஈஸ்ட் அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன.

.

மூலக்கதை