Essonne : இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட இளைஞன்! - வீதியில் உயிருக்குப் போராடிய சோகம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
Essonne : இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட இளைஞன்!  வீதியில் உயிருக்குப் போராடிய சோகம்!!

16 வயதுடைய இளைஞன் ஒருவர் இரும்பு கம்பி ஒன்றில் மிக மோசமாக தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. 
 
Essonne இன் Plateau de Ris-Orangis  இல் உள்ள கட்டிடத்துக்கு அருகே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சனிக்கிழமை மாலை குறித்த பகுதியில் வசிக்கும் இளைஞன் வீட்டை விட்டு இறங்கி, வீதியில் நடந்து செல்லும் போது, எதிர்பாரா விதமாக நபர் ஒருவரினால் கோரமாக தாக்கப்பட்டுள்ளார். இரும்பு கம்பி ஒன்றினால் தலையில் பலமாக அடிக்கப்பட்டுள்ளது. இதனால் நிலைகுலைந்த இளைஞன், அப்பகுதியிலேயே இரத்த காயத்துடன் உயிருக்கு போராடியுள்ளான். நீண்ட நேரத்துக்குப் பின்னர், அவசர உதவி சம்பவ இடத்துக்கு வந்தது. அதற்குள்ளாக இளைஞன் 'கோமா' நிலைக்கு உள்ளாகியுள்ளான். 
 
பின்னர் இளைஞனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கிடைத்த தகவலின் படி, குறித்த இளைஞன் மேலும் மோசமான நிலையில் சிக்கிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

மூலக்கதை