விவசாயிகளுக்கு வாடகை டிராக்டர்; ‘டாபே’ நிறுவனம், ‘ஆப்’ வெளியீடு

தினமலர்  தினமலர்
விவசாயிகளுக்கு வாடகை டிராக்டர்; ‘டாபே’ நிறுவனம், ‘ஆப்’ வெளியீடு

புதுடில்லி : சென்­னை­யைச் சேர்ந்த, ‘டாபே’ நிறு­வ­னம், விவ­சா­யி­க­ளுக்கு டிராக்­டர், வேளாண் சாத­னங்­கள் ஆகி­ய­வற்றை, வாட­கைக்கு பெறும் வச­தியை செய்து கொடுத்­துள்­ளது.

இது குறித்து, டாபே நிறு­வன தலை­வர் மற்­றும் தலைமை செயல் அதி­காரி, மல்­லிகா ஸ்ரீனி­வா­சன் கூறி­ய­தா­வது: நிறு­வ­னத்­தின் சமூக பொறுப்­பு­ணர்வு நட­வ­டிக்­கை­களில் ஒன்­றாக, டிராக்­டர், வேளாண் சாத­னங்­கள் ஆகி­ய­வற்றை, விவ­சா­யி­கள் வாட­கைக்கு பெற வசதி செய்­யப்­பட்­டுள்­ளது. இதற்­காக, ‘ஜேபார்ம் சர்­வீ­சஸ்’ என்ற இல­வச மொபைல் போன், ‘ஆப்’ உரு­வாக்­கப்­பட்டு உள்­ளது. இந்த ஆப் மூலம், சாகு­ப­டிக்கு தேவை­யான டிராக்­டர், நவீன தொழில்­நுட்ப வேளாண் இயந்­தி­ரங்­கள் ஆகி­ய­வற்றை, விவ­சா­யி­கள் வாட­கைக்கு பெற­லாம்.

இது, நவீன வேளாண் சாத­னங்­கள், புதிய தொழில்­நுட்­பங்­கள் ஆகிய வச­தி­களை பெற முடி­யாத விவ­சா­யி­க­ளுக்கு, பேரு­த­வி­யாக இருக்­கும். விவ­சா­யி­கள் வரு­வாயை, 2022ல் இரட்­டிப்­பாக்க வேண்­டும் என்ற, பிர­த­ம­ரின் திட்­டத்­திற்­கும் வலு சேர்க்­கும். விவ­சா­யி­கள், ‘ஆப்’பை மொபைல் போனில் பதி­வி­றக்கி, தங்­க­ளி­டம் உள்ள டிராக்­டர், வேளாண் சாத­னங்­கள் உள்­ளிட்ட விப­ரங்­களை அளிக்­க­லாம். அது­போல, தங்­க­ளுக்கு தேவைப்­படும் வேளாண் சாதன விப­ரங்­க­ளை­யும் வெளி­யி­ட­லாம்.

குஜ­ராத் உள்­ளிட்ட நான்கு மாநி­லங்­களில், சோதனை அடிப்­ப­டை­யில் செயல்­ப­டுத்­திய இத்­திட்­டத்­தில், 60 ஆயி­ரம் பேர் இணைந்து, 1 லட்­சத்­திற்­கும் அதி­க­மான, ‘ஆர்­டர்’களை வழங்­கி­யுள்­ள­னர். தற்­போது, நாடு முழு­வ­தும் இச்­சேவை விரி­வாக்­கம் செய்­யப்­ப­டு­கிறது. இந்த ஆப் மூலம், வானிலை நில­வ­ரம், வேளாண் பொருட்­கள் விலை, வர்த்­த­கம் உள்­ளிட்ட தக­வல்­க­ளை­யும் இல­வ­ச­மாக பெற­லாம். மொபைல் போன் இல்­லா­த­வர்­கள், இல­வச அழைப்பு எண்ணை பயன்­ப­டுத்­த­லாம். இவ்­வாறு அவர் தெரி­வித்­துள்­ளார்.

மூலக்கதை