பழைய பைக்குகள் சந்தையில் ‘ஹார்லி டேவிட்சன்’ நிறுவனம்
புதுடில்லி : அமெரிக்காவைச் சேர்ந்த, ‘ஹார்லி டேவிட்சன்’ பைக் தயாரிப்பு நிறுவனம், இந்தியாவில் பழைய பைக்குகளுக்கான சந்தையில் இறங்குவதாக அறிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் அறிவித்து உள்ளதாவது: உபயோகப்படுத்திய ஹார்லி டேவிட்சன் பைக்குகளை தீர பரிசோதித்து, அதன் அடிப்படையில் அவற்றுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு, அதன் பின்னரே விற்பனை செய்யப்படும். இந்த பைக்குகளுக்கு, ஒரு ஆண்டு காலத்துக்கான வாரண்டியும் வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் விருப்பப்பட்டால், இந்த வாரண்டியை மேலும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்துக் கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே, ஹார்லி டேவிட்சனின் போட்டி நிறுவனங்களில் ஒன்றான, அமெரிக்காவைச் சேர்ந்த, ‘டிரையம்ப்’ பழைய பைக்குகளை விற்பனை செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக தெரிவித்து உள்ளது. உள்நாட்டு நிறுவனமான, ‘ராயல் என்பீல்டு’ நிறுவனம், ஏற்கனவே இந்த பழைய பைக்குகளுக்கான சந்தையில் நுழைந்துவிட்டது.