பங்கு வெளியீட்டில் ‘தினேஷ் இன்ஜினியர்ஸ்’
புதுடில்லி : தகவல் தொடர்பு உள்கட்டமைப்பு நிறுவனமான, ‘தினேஷ் இன்ஜினியர்ஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 28ம் தேதி துவங்குகிறது.
நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 185 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளது. இதற்காக, ஒரு பங்கின் விலையை, 183 – 185 ரூபாய் என நிர்ணயித்துள்ளது. நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 28ம் தேதி துவங்கி, அக்., 3ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
இந்நிறுவனம், 185 கோடி ரூபாய் நிதியை திரட்டுவதற்காக, 1 கோடி பங்குகளை வெளியிட இருக்கிறது. பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியை, வணிகத்தை விரிவாக்கம் செய்யவும், நிர்வாக செலவுகளுக்காகவும் பயன்படுத்த உள்ளது. இந்த பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, ‘ஹெம் செக்யூரிட்டீஸ்’ நிறுவனம் மேற்கொள்கிறது. இந்நிறுவனப் பங்குகள், மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தை ஆகிய சந்தைகளில் பட்டியலிடப்பட உள்ளன.