இருவேறு நகரங்களில் காவல்துறையினர் அதிரடி! - கடத்தல் கும்பல் கூட்டமாக கைது!!
பரிஸ் மற்றும் துலு நகர்களில் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்ட மிகப்பெரும் கடத்தல் கும்பல் ஒன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Montpellier நகர காவல்துறையினர் மேற்கொண்ட நீண்ட கால கண்காணிப்பு சோதனையை அடுத்து, அவர்கள் ஆறுபேர் கொண்ட கடத்தல் குழு ஒன்றை பரிசிலும் Toulouse நகரிலும் வைத்து கைது செய்துள்ளனர். இவர்கள் நீண்டகால கண்காணிப்பு மற்றும் விசாரணைகளின் பின்னரே கைது செய்யப்படுள்ளனர். இவர்கள் கைதுசெய்யப்படும் போது, அவர்களிடம் 7.5 கிலோ கொக்கைன் போதைப்பொருளும் €50,000 ரொக்கப்பணமும் மீட்கப்பட்டுள்ளன. தவிர அவர்களிடம் இருந்து நான்கு மகிழுந்துகளும் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட ஆறு பேர்களும் 30 இல் இருந்து 35 வயதுடையவர்கள் எனவும், தற்போது காவல்துறையினர் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ள அவர்கள் விரைவில் நீதிமன்றத்தில் விசாரணைகளுக்காக அழைத்துவரப்பட உள்ளனர்.