வால்மார்ட் நிறுவன தலைவர் வருகை
புதுடில்லி:வால்மார்ட் நிறுவனத்தின், தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான, ஜூடித் மெக்கென்னா, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், பியுஷ் கோயலை, நேற்று, சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பில், இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்கள் விற்பனை குறித்தும், உள்ளூர் பொருட்களை வாங்குவது தொடர்பான விதிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக, அமைச்சகம் தெரிவித்துள்ளது.பட்ஜெட்டில், சிங்கிள் பிராண்டு சில்லறை வர்த்தகத்தில், அன்னிய நேரடி முதலீடு குறித்த விதிகளை தளர்த்த இருப்பதாக தெரிவித்துள்ள நிலையில், இந்த சந்திப்பு, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
வால்மார்ட் தலைவர், மெக்கென்னா, கூறியதாவது:
‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், உள்நாட்டு பொருட்களை வாங்குவது குறித்தும், உள்ளூர் தயாரிப்பாளர்களுக்கு ஆதராவாக வால்மார்ட் இருப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.