வெளிநாட்டிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற சிறுவனுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!
தாயகத்தில் நிலவும் கடும் வரட்சி காரணமாக சிறுவன் ஒருவர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடும் வெப்பத்தினை தாக்கிக் கொள்ள முடியாத சிறுவன், குளிர்பானம் என நினைத்து மண்ணெண்ணையை அருந்திய பரிதாப சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
இதனால் பாதிப்படைந்த சிறுவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுவனை சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு சிறுவன் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வெளிநாட்டிலிருந்து வருகை தந்த சிறுவன் ஒருவரே இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.
கைதடியிலுள்ள அவர்களின் உறவினர்களை பார்க்க வெளிநாட்டிலிருந்து குடும்பமாக இலங்கை வந்துள்ளனர்.