போராடி தோல்வி அடைந்த ஹைதராபாத்!

PARIS TAMIL  PARIS TAMIL
போராடி தோல்வி அடைந்த ஹைதராபாத்!

ஐபிஎல் போட்டியின் 22வது போட்டி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோவ் 1 (6) ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். 
 
இதனால் டேவிட் வார்னர் தனது அதிரடியை மாற்றி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் ஜோடி சேர்ந்த விஜய் சங்கரும் பொறுமையாகவே ஆடினார்.
 
26 (27) ரன்களில் விஜய் சங்கர் விக்கெட்டை பறிகொடுக்க, அடுத்த வந்த நபி 12 (7) ரன்களில் ரன் அவுட் ஆனார். விக்கெட்டை இழக்காமல் ஆடிய வார்னர் இறுதிவரையில் பொறுமையாகவே ஆடி 62 பந்துகளில் 70 ரன்கள் மட்டும் எடுத்தார். இறுதி நேரத்தில் களமிறங்கிய ஹூடா 3 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 150 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது. பஞ்சாப் அணியில் அஸ்வின் ஒரு விக்கெட் மற்றும் ரன் அவுட்டை எடுத்தார்.
 
இந்தப் போட்டியில், 7வது ஓவரை அஸ்வின் வீசினார். அந்த ஓவரில் அஸ்வின் பந்துவீசும் போது, அவரது கையில் இருந்து பந்து முற்றிலும் வெளியேறும் வரை, மிகவும் எச்சரிக்கையாக பேட்டை க்ரீஸில் வைத்திருந்தார் வார்னர். ஒருவகையில் அஸ்வினை வார்னர் கிண்டல் செய்யும் வகையில் இது உள்ளது. இதனை காட்டும் புகைப்படம் உடனடியாக ட்விட்டரில் பலராலும் பகிரப்பட்டது. அந்த படத்தை பார்க்கும் போது சற்றே நகைச்சுவையாக இருக்கும். ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நடந்தது போல், இந்தப் போட்டியிலும் எதிர்பார்க்கலாம் என்று ஒரு கமெண்ட் செய்திருந்தார்.
 
முன்னதாக, ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில், பட்லரை ‘மன்கட்’ முறையில் அஸ்வின் அவுட் செய்தார். அஸ்வினின் இந்த மன்கட் அவுட் சமூக வலைதளங்களில் அப்போது பெரிய விவாதத்தையே இது கிளப்பியது.

மூலக்கதை