மஞ்சள் மேலங்கி போராட்டத்தில் வன்முறை! - வரலாறு காணாத எதிர்ப்பு!!
கடந்த சனிக்கிழமை பரிசில் இடம்பெற்ற மஞ்சள் மேலங்கி போராட்டத்துக்கு, பிரெஞ்சு மக்கள் வரலாறு காணாத அளவு எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
புதிய கருத்துக்கணிப்பு ஒன்றிலேயே இது தெரியவந்துள்ளது. பிரபல செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்காக Elabe நிறுவனம் புதிய கருத்துக்கணிப்பு ஒன்றை எடுத்திருந்தது. அதன் முடிவுகள் இன்று புதன்கிழமை காலை வெளியாகியிருந்தது. இதில் 84 வீதமான பிரெஞ்சு மக்கள் கடந்த சனிக்கிழமை பரிசில் இடம்பெற்றிருந்த வன்முறைச் சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் 70 வீதமான மக்கள் <<மஞ்சள் மேலங்கி போராளிக தங்கள் போராட்டத்துக்கான நோக்கத்தினை மறந்துவிட்டார்கள்!>> என தெரிவித்துள்ளனர்.
கருத்துக்கணிப்பு மார்ச் 18, 19 ஆகிய திகதிகளில் இடம்பெற்றிருந்தது. 18 வயதுக்கு மேற்பட்ட 1,001 பேரிடம் இது எடுக்கப்பட்டிருந்தது.