பிரியா வாரியர் - நூரின் ஷெரீப் மோதல்
ஒரு அடார் லவ் படத்தில் கண் சிமிட்டியும் இந்திய அளவில் பிரபலமானவர் பிரியா வாரியர். இந்த கண்சிமிட்டலுக்காகவே படம் ஓடும் என்று பேசினர். ஆனால் படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் ஓமர் லூலு கூறும்போது, “நூரின் ஷெரீப் திறமையான நடிகை. அவருக்கு முன்னுரிமை அளித்து கதையை உருவாக்கி இருந்தேன். ஆனால் பிரியா வாரியர் கண்சிமிட்டல் பாடல் வைரலானதும் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கும்படி தயாரிப்பாளர் வற்புறுத்தியதால் பிரியாவாரியரை முதன்மையான கதாபாத்திரமாக்கி கதையை மாற்றினேன்” என்றார்.
நடிகை நூரின் ஷெரீப் கூறும்போது, “படத்தில் எனக்குத்தான் முதன்மையான கதாபாத்திரம் என்று சொல்லி படப்பிடிப்பை தொடங்கினார்கள். ஆனால் பிரியா வாரியர் கண்சிமிட்டலால் கதையை மாற்றி அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து என்னை ஓரம் கட்டி துணை நடிகையாக்கிவிட்டனர். இது வருத்தமாய் இருந்தது.” என்றார்.
இதனால் பிரியா வாரியருக்கும், நூரின் ஷெரீப்புக்கும் மோதல் ஏற்பட்டு உள்ளது. நூரின் ஷெரீப்புக்கு பதில் அளித்துள்ள பிரியா வாரியர், “கதையை எனக்காக மாற்றியதாக குற்றம்சாட்டுகின்றனர். கண்சிமிட்டல் பாடலுக்கு பிறகு எனக்கு முக்கியத்துவம் அளிப்பதுபோல் கதையை மாற்றியதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. படத்தில் தனக்கு முக்கியத்துவம் இல்லாமல் செய்துவிட்டதாக நூரின் ஷெரீப் குறை கூறி உள்ளார். அவரை படத்தில் ஓரம்கட்டவில்லை. முதலில் சொன்ன கதையைத் தான் அப்படியே படமாக்கி இருந்தனர்”