இலங்கை ஊடாக கடத்தப்படும் பெண்கள்! வெளியாகிய அதிர்ச்சி தகவல்
இலங்கையின் ஊடாக குவைத்துக்கு ஆந்திர பிரதேச தெலுங்கானா மாநிலப் பெண்களை கடத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான நடவடிக்கை ஒன்று தற்போது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது
இந்திய நாளிதழ் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் அந்த செய்தியில் மேலும்,
இந்த சம்பவம் தொடர்பில் 10 பேர் கொண்ட குழுவொன்றை தாம் கைது செய்துள்ளதாக தெலுக்கானா பொலிஸ் தெரிவித்துள்ளது.
ஆந்திர பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி, கிருஸ்ணா, கடப்பா போன்ற மாவட்டங்களில் இருந்தே அதிகமான பெண்கள் குவைத்துக்கு கடத்தப்பட்டுள்ளனர்.
குவைத்தில் பணிகளுக்கு என்றுக்கூறி போலியான சுற்றுலா விசா தயாரித்து பின்னர் இலங்கையின் ஊடாக குவைத்தில் சென்று இறங்கியதும் அவர்களுக்கு தொழில் விசாக்கள் வழங்கப்படுகின்றன.
இதற்காக பெண்களிடம் பணமும் முன்கூட்டியே அறவிடப்படுகிறது. இந்த நிலையில் பொலிஸ் சான்றிதழ் பெறுவதற்காக பெண்கள் வந்து செல்வதை அவதானித்த
தெலுக்கான பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போதே இந்த தொடர் சம்பவம் அம்பலமாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.