யாழில் பொலிஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய மூவர்!
யாழ்ப்பாணத்தில் 10 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ். செம்மணி பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதிக்கு நேற்று இரவு 10 கிலோ கிராம் கேரளா கஞ்சாவை கைமாற்றுவதற்கு இம்மூவரும் வருகை தந்துள்ளனர்.
இதன்போது பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம், உடுத்துறைப் பகுதியைச் சேர்ந்த மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதோடு யாழ்.நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.