காயமடைந்த குசல் பெரேரா!

PARIS TAMIL  PARIS TAMIL
காயமடைந்த குசல் பெரேரா!

இலங்கை அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா உபாதை காரணமாக, தென்னாபிரிக்காவுக்கு எதிராக மீதமுள்ள இரண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இலங்கை கிரிக்கெட் நிறுவனம்வெளியிட்ட ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், குசல் ஜனித் பெரேராவின் வெற்றிடத்துக்கு பதிலாக எந்த வீரர் இலங்கை குழாத்தில் இடம்பெறுவார் என அறிவிக்கப்படவில்லை.
 
இலங்கை அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரை இலங்கை அணி 2 போட்டிகள் எஞ்சிய நிலையில் கைப்பற்றியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது சர்வதேச ஒருநாள் போட்டி நாளை மறுதினம் போர்ட் எலிசெபெத்தில் நடைபெறவுள்ளது.
 
இதேவேளை, இலங்கை அணிக்கு எதிராக எஞ்சியுள்ள இரண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்குமான தென்னாபிரிக்க குழாத்தில் சகலதுறை வீரரான ஜியோன் போல் டுமினி ஹாசீம் அம்லா மற்றும் எய்டன் மார்க்ரம் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
 

மூலக்கதை