என் மகன்களுக்கு என் கதை தேவைப்படவில்லை : சீனிவாசன்

தினமலர்  தினமலர்
என் மகன்களுக்கு என் கதை தேவைப்படவில்லை : சீனிவாசன்

படத்திலும் சரி.. நேரிலும் சரி.. மனதில் பட்டதை துணிச்சலுடன் பேசுவதில் வல்லவர் மலையாள நடிகரும், கதாசிரியரும், இயக்குனருமான சீனிவாசன்.. கிட்டத்தட்ட 3௦ ஆண்டுகளுக்கு மேலாக மலையாள திரையுலகில் வலம் வரும் இவர், பல சூப்பர்ஹிட் படங்களுக்கு கதை எழுதியுள்ளார். சமீபத்தில் வெளியான பஹத் பாசில் நடித்த 'ஞான் பிரகாசன்' என்கிற படத்திற்கும் இவர்தான் கதை எழுதியிருந்தார். படமும் வரவேற்புடன் ஓடியது.

ஆனால் இவரது மூத்தமகன் இயக்குனர் வினீத் சீனிவாசனன், இளையமகன், நடிகராக இருந்து தற்போது இயக்குனராக மாறியுள்ள தயன் சீனிவாசன் இருவருமே தங்களது படத்திற்கு கதை வேண்டுமென்று இவரிடம் கேட்பதில்லையாம். கேட்டால், அவர்களுக்கு என் கதை தேவைப்படவில்லை என்கிறார் சீனிவாசன்.. இதில் தயன் சீனிவாசன் தற்போது நயன்தாரா - நிவின்பாலி இணைந்து நடிக்கும் 'லவ் ஆக்சன் ட்ராமா' என்கிற படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை