நாளை பத்தாவது வார ஆர்ப்பாட்டம்! - இதுவரை ஒரு அமைப்பினர் மாத்திரமே அனுமதி கோரியுள்ளனர்!!
நாளை சனிக்கிழமை ஜனவரி 19 ஆம் திகதி மஞ்சள் மேலங்கி போராட்டத்தின் பத்தாவது வாரத்துக்கான ஆர்ப்பாட்டம் இடம்பெற உள்ளது. ஆனால் இம்முறை மிக குறைந்த அளவான குழுவே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் என அறியமுடிகிறது.
இன்று வெள்ளிக்கிழமை காலை 11 மணி வரை ஒரே ஒரு அமைப்பினர் மாத்திரமே ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கோரியுள்ளனர். இதேநேரத்தில் கடந்த வாரம் நான்கு வெவ்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருந்தனர். நாளை இடம்பெறும் ஆர்ப்பாட்டம் Invalides இல் இருந்து Montparnasse வரை இடம்பெற உள்ளதாக அறிய முடிகிறது.
அதேவேளை, இரண்டாவது குழுவின் போராட்டத்துக்கான கோரிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிஸ் காவல்துறை தலைமையகம் பாதுகாப்பை உறுதி செய்து தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் பத்தாவது வார ஆர்ப்பாட்டமே நாளை இடம்பெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.