வெளிநாடு ஒன்றில் 54 இலங்கை பெண்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலைமை!
இலங்கை பெண்கள் பலர் தனது சொந்த தாய் நாட்டை விட்டுவிட்டு வெளிநாடுகளில் சென்று வேலை செய்து வருகின்றனர்.
குடும்பத்தின் வறுமை காரணமாக அவர்கள் இவ்வாறு வெளிநாடுகளில் பணி செய்து வருகின்றனர்.
சில பெண்கள் பல வருடங்களாக வெளிநாட்டிற்கு சென்று நாடு திரும்பாமல் அங்கு வாழும் அவல நிலைகளும் ஏற்பட்டுள்ளது.
சவுதி அரேபியா சென்று அங்கு பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ள பெண்கள் சிலர் தொடர்பில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
குறித்த காணொளி சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
இதில், அவர்களுக்கு உதவி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.