இவ்வருடத்தில் மாத்திரம் 49 காவல்துறை அதிகாரிகள் தற்கொலை!!
CRS அதிகாரி ஒருவர் தனது சேவைத் துப்பாக்கியை பயன்படுத்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
Loire-Atlantique இல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
1962 ஆம் அண்டு பிறந்த குறித்த அதிகாரி, Loire-Atlantique இன் Saint-Brevin-les-Pins நகரில் பணிபுரிந்துள்ளார். குறித்த அதிகாரி நேற்று புதன்கிழமை இரவு, தனது வீட்டில் சேவைத் துப்பாக்கியை பயன்படுத்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார். தலையில் துப்பாக்கியால் சுட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அதிகாரியின் மனைவி இத்தகவலை காவல்துறையினருக்கு தெரிவித்துள்ளார்.
தவிர, காவல்துறை அதிகாரி ஒருவர் தற்கொலை செய்வது 2017 ஆம் ஆண்டில் இது 49 வது தடவையாகும். இவர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் சேவைத்துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இறந்துள்ளனர்.