சுயநலத்தில் பொதுநலம் : கமல்
அரசியல், சினிமா என பிஸியாக இருக்கும் கமல்ஹாசன், இப்போது பிக்பாஸ் 2 மூலம் சின்னத்திரையிலும் பிஸியாகி உள்ளார். பிக்பாஸ் 2 நிகழ்ச்சி நேற்று முதல் ஆரம்பமானது. அப்போது பேசிய கமல்ஹாசன்,
60 ஆண்டுகாலம் சினிமாவில் கிடைக்காதது, ரியாலிட்டி ஷோ மூலம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. சினிமாவில் விக்ரமாகவோ, வேலு நாயக்கராவோ, விருமாண்டியாகவோ தெரியலாம். ஆனால் ரியாலிட்டி ஷோ மூலமே நான் நானாக வர முடியும். நாம் இணைந்து செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. அதற்காகவும் இந்த ஷோவை பயன்படுத்துகிறேன். இதை சுயநலம் என்கிறார்கள், நான் பொதுநலம் என்கிறேன் என்றார்.