கோஹ்லியுடன் ஷாம்பெயின் குடிக்க சச்சின் ரெடி...ஆனால்....

தமிழ் முரசு  தமிழ் முரசு
கோஹ்லியுடன் ஷாம்பெயின் குடிக்க சச்சின் ரெடி...ஆனால்....

மும்பை: ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதம் விளாசிய வீரர் சச்சின் டெண்டுல்கர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர், 463 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று, 49 சதங்களை விளாசியுள்ளார்.

இந்த சாதனையை விராட் கோஹ்லி தகர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டனான விராட் கோஹ்லி, இதுவரை 208 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று, 35 சதங்களை விளாசியுள்ளார்.

இதனிடையே ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் விளாசிய வீரர் என்ற தனது சாதனையை தகர்க்கும் வகையில், விராட் கோஹ்லி 50 சதங்களை விளாசினால், அவருடன் ஷாம்பெயினை பகிர்ந்து கொள்வதாக சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘’எனது சாதனையை விராட் கோஹ்லி தகர்த்து விட்டால், அவருடன் ஷாம்பெயினை பகிர்ந்து கொள்கிறேன்.

ஷாம்பெயின் பாட்டில்களை அவருக்கு அனுப்ப மாட்டேன். நானே எடுத்து சென்று, விராட் கோஹ்லியுடன் பகிர்ந்து கொள்வேன்’’ என்றார்.


தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக விராட் கோஹ்லி விளையாடி வருகிறார். இதனிடையே சச்சின் டெண்டுல்கருக்கு இன்று 45வது பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.



இதற்காக அவருக்கு, முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள், அரசியல் பிரபலங்கள், தொழில்அதிபர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

.

மூலக்கதை