முல்லைத்தீவு கடற்கரையில் சிக்கிய விலைமதிக்க முடியாத பொருள்!
முல்லைத்தீவு கடற்கரையில் விசித்திரமான சங்கு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் சிலரால் இன்று இந்த சங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று முற்பகல் கடற்கரையோரப் பிரதேசத்தை சுத்தப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட போதே இந்த சங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சங்கின் வெளிப்பகுதி தோற்றம் ஒரு பூசணிக்காய் போன்று காணப்பட்டுள்ளது. உள்பகுதி ஒரு பறவை போன்று விசித்திரமாக காணப்படுவதாக மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இந்த சங்கு விலைமதிக்க முடியாத பொருளாக காணப்படுவதாகவும் அந்தப் பகுதி மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.