மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் அரை இறுதியில் நடால்

தினகரன்  தினகரன்

பாரிஸ்: பிரான்சில் நடைபெற்று வரும் மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட, நம்பர் 1 வீரர் ரபேல் நடால் (ஸ்பெயின்) தகுதி பெற்றார். கால் இறுதியில் ஆஸ்திரியாவின் டொமினிக் தியமுடன் (5வது ரேங்க்) நேற்று மோதிய நடால், அதிரடியாக விளையாடி தியமின் சர்வீஸ் ஆட்டங்களை மிக எளிதாக முறியடித்தார். முதல் செட்டை 6-0 என்ற கணக்கில் கைப்பற்றிய அவர், அதே வேகத்துடன் 2வது செட்டிலும் 6-2 என வென்று 13வது முறையாக மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் தொடரின் அரை இறுதிக்கு முன்னேறினார். இந்த போட்டி ஒரு மணி நேரத்திலேயே முடிவுக்கு வந்தது. மற்றொரு கால் இறுதியில் பல்கேரியாவின் கிரிகோர் திமித்ரோவ் 6-4, 7-6 (7-5) என்ற நேர் செட்களில் டேவிட் காபினை (பெல்ஜியம்) வீழ்த்தினார்.

மூலக்கதை