எதிர்பார்க்காத நேரத்தில் இலங்கையில் தரையிறங்கிய உலகிலேயே மிகப் பெரிய விமானம்
உலகிலேயே மிகப் பெரிய விமானமான மத்தள மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
Antanov An – 225 Mriya எனப்படும் விமானம் விமானமே இவ்வாறு தரையிறங்கியுள்ளது.
எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காகவும், விமானிகள் ஓய்வு பெறுவதற்காகவும் குறித்த விமானம் மத்தள விமான நிலையத்தில் தரையிரங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விமானம் இலங்கையில் தரையிறங்குதற்கு முன்னதாக எந்த ஏற்பாடுகளும் இருந்திருக்கவில்லை.
எனினும் திடீரென எடுக்கப்பட்ட முடிவின் காரணமாகவே விமானம் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.