யாழில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கு ஏற்பட்ட நிலை?

PARIS TAMIL  PARIS TAMIL
யாழில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கு ஏற்பட்ட நிலை?

யாழ்ப்பாணம் வடமராட்சி உடுப்பிட்டியில் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
குறித்த நால்வரும் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.
 
வடமராட்சி உடுப்பிட்டி இமையானன் பகுதியில் நால்வர் வீடொன்றில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டிருந்த போது பொதுமக்களால் சுற்றி வளைத்தனர். அவர்களில் மூவர் மூவர் தப்பியோடியுள்ளனர்.
 
பொதுமக்களால் பிடிக்கப்பட்ட ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டள்ளனர்.
 
வல்வெட்டித்துறைப் பொலிஸார் மேற்கொண்ட முயற்சியின் பலனாக ஏனைய மூவரும் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுணாவில் பகுதியில் வைத்து இன்று கைது செய்யப்பட்டனர்.
 
சாவகச்சேரி நூணாவில் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து திருட்டு நடவடிக்கைக்குப் பயன்படுத்திய படி ரக வாகனம் ஒன்றும், 12 தொடுபேசிகள், 4சோடி கால் சலங்கைகள், வீட்டில் பணம் சேமிக்கும் உண்டியல்கள் நான்கு, ஒருதொகை கட்டார் நாட்டுப் பணம், 2 கமராக்களும் மீட்கப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை