தொடரூந்து கடவையை கடக்க முனைந்த இளம் பெண் பலி!!
தொடரூந்து கடவையை கடக்க முயன்ற இளம் பெண் ஒருவர் TER தொடரூந்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
இன்று புதன்கிழமை காலை 7.20 மணிக்கு, Saint-Seurin-sur-l'Isle (Gironde) இல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மூடியிருந்த தொடரூந்து கடவையை கடக்க முயன்ற 16 வயதுடைய இளம் பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார். ஜோந்தாமினர்கள் தெரிவிக்கும் போது, இளம் பெண் ஒருவர் தொடரூந்து நிலையத்துக்கு அருகே உள்ள கடவை ஒன்றை கடக்க முயன்றுள்ளார். Bordeaux- Périgueux நகரங்களை இணைக்கும் TER வேகமாக வந்து குறித்த இளம் பெண்ணை இடித்துள்ளது என குறிப்பிட்டனர்.
குறித்த பாடசாலை மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஜோந்தாமினர்கள் வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளனர்.