ஹர்திக் பாண்ட்யா அடித்த பந்து! மயிரிழையில் தப்பிய நடுவர்
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடைபெற்று வருகிறது.
இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 622 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை துவங்கிய இலங்கை அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 50 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணியின் ஹர்திக் பாண்ட்யா ஸ்டிரைட் திசையை நோக்கி அடித்தார். அப்போது பந்தானது நின்று கொண்டிருந்த நடுவரை நோக்கி சென்றது, நடுவர் நகர்ந்து மயிரிழையில் ஹர்திக் பாண்ட்யா அடித்த பந்தில் இருந்து தப்பினார்.