3 ஆவது டெஸ்ட் போட்டி! இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்
இலங்கை அணிக்கெதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொட்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது.
இதில் கொல்கத்தாவில் இடம்பெற்ற முதலாவது போட்டி வெற்றி தோலிவியின்றி சமநிலையில் முடிவடைந்தது.
இரு அணிகளுக்குமிடையிலான நாக்பூரில் இடம்பெற்ற 2 ஆவது போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 239 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்று தொடரில் 1-0 என முன்னிலைபெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 3 ஆவதும் இறுதியுமான போட்டி இன்று டில்லியில் ஆரம்பமாகின்றது.
இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.