பிரெஞ்சு நபரை பயங்கரவாதி என நினைத்து துப்பாக்கியால் சுட்ட ஸ்பெயின் காவல்துறை!!

PARIS TAMIL  PARIS TAMIL
பிரெஞ்சு நபரை பயங்கரவாதி என நினைத்து துப்பாக்கியால் சுட்ட ஸ்பெயின் காவல்துறை!!

பிரெஞ்சு நபர் ஒருவரை பயங்கரவாதி என நினைத்து ஸ்பெயின் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். ஸ்பெயின் எல்லையில் இச்சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. 
 
ஸ்பெயினின் கட்டலோனியா மாகாண காவல்துறையினர் பயங்கரவாத தடுப்பு சோதனையில் ஈடுபட்டிருந்தனர். El Jonquera நகருக்கு அருகே உள்ள நெடுஞ்சாலையில் சுங்க வரி அறவிடப்படும் இடத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிரான்சில் பதிவு செய்யப்பட்ட மகிழுந்து ஒன்றில் இருந்து இறங்கிய நபரின் நடவடிக்கைகள் வித்தியாசமானதாக இருந்ததால் தாம் துப்பாக்கிச்சூடு நடத்தவேண்டி ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 'குறித்த நபர் கையில் ஆயுதம் ஒன்றை மறைத்து எங்களை நோக்கி வந்ததார்!' என காவல்துறையினர் தெரிவித்ததோடு, பிந்திக்கிடைத்த தகவல்களின் படி அவர் 'அல்லா-ஹூ-அக்பர்!' என கோஷமிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். 
 
குறித்த நபரை முன்னேறாமல் அங்கேயே நிற்கச் சொல்லி தாம் வானத்தை நோக்கி சுட்டு பணித்ததாகவும், ஆனால் குறித்த நபர் தொடர்ந்து முன்னேறியதால் சுடவேண்டி வந்தது எனவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைகள் ஆரம்பித்துள்ளன.

மூலக்கதை