ராஜபக்ஷ செய்மதிக்கு 460 மில்லியன் வழங்கிய சிறிலங்கா
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் போது அவரது மூன்றாவது மகன் ரோஹித ராஜபக்ஷ உட்பட குழுவினரால் சுப்ரிம் செட் என்ற செயற்கைகோள் ஒன்று விண்ணுக்கு ஏவப்பட்டதாக கூறப்பட்டது.
அதற்கமைய அதற்கு செலவிடப்பட்ட பணம் மின்சார சபையிடம் பெற்று கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துளளார்.
அந்த திட்டத்திற்கு மின்சார சபையினால் 460 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் தான் முறைப்பாடு செய்ததாகவும், அந்த முறைப்பாடு விசாரிக்கப்பட்டு வருவதாகவும், அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஓய்வுபெற்ற மின்சார சபை ஊழியர்களின் நலன்புரி சங்கத்தின் 21-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.