பிரதமராகும் Nicolas Dupont-Aignan!! - மரீன் லூ பென் அறிவிப்பு!!
ஜனாதிபதி தேர்தலின் இரண்டாம் சுற்றில் வெற்றி பெற்று, தாம் ஜனாதிபதி ஆனால், Nicolas Dupont-Aignan பிரதமராக அறிவிக்கப்படும் என மரீன் லூ பென் இன்று அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்றில் வெற்றி பெற்று, இரண்டாம் சுற்றுக்கு தகுதியான மரீன் லூ பென், இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரங்களில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார். ஒருபக்கம் இம்மானுவல் மக்ரோனுக்கு ஆதரவுகள் பெருக, தேசிய முன்னணி கட்சி வேட்பாளர் மரீன் லூ பென்னுக்கும் ஆதரவுகள் பெருகி வருகின்றன. இந்நிலையில் முதல் சுற்று தேர்தலில் தோல்வியுற்ற தேர்தல் வேட்பாளரான Nicolas Dupont-Aignan, தாம் மரீன் லூ பென்னுக்கே ஆதரவளிப்பதாக அறிவித்திருந்தார். தவிர நாம் அரசியல் ஒப்பந்தம் ஒன்றையும் போட்டுள்ளோம் என அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று ஊடகங்களுக்கு பேட்டியளித்த மரீன் லூ பென், தாம் ஜனாதிபதியாக தேர்வானால் Nicolas Dupont-Aignan ஐ, பிரதமராக்குவேன் என அறிவித்துள்ளார்.
அதன் போது, Nicolas Dupont-Aignan மிகவும் தேசபக்தி உடையயவர் என்றும், இரண்டு குடும்பங்கள் ஒன்றிணைவது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்றும் மரீன் லூ பென் குறிப்பிட்டுள்ளார்.