துப்பாக்கிச்சூட்டில் காவல்துறை அதிகாரி பலி! - கவனக்குறைவால் பெரும் சோகம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
துப்பாக்கிச்சூட்டில் காவல்துறை அதிகாரி பலி!  கவனக்குறைவால் பெரும் சோகம்!!

காவல்துறை அதிகாரி ஒருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். சக காவல்துறை அதிகாரி ஒருவரின் கவனக்குறைவால் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது. 
 
சம்பவம் தொடர்பில் மேலும் அறிய முடிவதாவது,  Haut-Rhin மாவட்டத்தின் Mulhouse பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று புதன்கிழமை மாலை 3.20 மணிக்கு இப்பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் வைத்தே காவல்துறை அதிகாரி உயிரிழந்துள்ளார். சிறியரக கைத்துப்பாக்கி ஒன்று சக அதிகாரியில் கையில் இருந்து வெடிக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த  காவல்துறை அதிகாரி ஒருவரின் இதயப்பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த காவல்துறை அதிகாரி 30 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 'கவனக்குறைவால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது!' என குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினரால் எதுவும் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பின்னர் காவல்துறை அதிகாரியின் சடலம் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

மூலக்கதை