மாகாண சபை உறுப்பினர் பிணையில் விடுதலை
ஆர்.ரமேஸ்
லிந்துலை, மெரயாவில் முச்சக்கர வண்டி சாரதியை தாக்கியக் குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட மத்திய மாகாண சபை உறுப்பினர் எ.பி.சக்திவேலை, 5,000 ரூபாய் ரொக்கப்பிணை மற்றும் 1 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் செல்லுமாறு, நுவரெலியா நீதவான் நீதிமன்ற நீதவான் இந்திக ரூவான் டி சில்வா, நேற்று உத்தரவிட்டார்.
இதேவேளை, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.