பங்கு வெளியீட்டு பணிகளில் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த, நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், பொது காப்பீட்டு வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. மத்திய அரசு, நான்கு பொது காப்பீட்டு நிறுவனங்களின், பங்குகளை வெளியிட்டு நிதி திரட்ட உள்ளது. அதன்படி, ஜெனரல் இன்சூரன்ஸ், விரைவில் பங்கு வெளியிட உள்ளது. தொடர்ந்து, நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனமும், பங்குகளை வெளியிட்டு நிதி திரட்ட உள்ளது. பங்கு வெளியீட்டு பணிகளை மேலாண்மை செய்யும் நிறுவனங்களை தேர்வு செய்ய, நியூ இந்தியா, வங்கிகளுடன் பேச்சு நடத்த உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘நிறுவனத்தின் பங்கு வெளியீட்டிற்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள், ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளன. அதற்காக, ஏழு நிறுவனங்களை நியமிக்க வாய்ப்புள்ளது’ என்றார்.