2வது இடத்திற்கு முன்னேற்றம்
ஏப்ரல் 1ம் தேதியை அடிப்படையாக வைத்து, டெஸ்ட் தரவரிசையில் முதல் மூன்று இடங்களை வகிக்கும் அணிகளுக்கு, ஐசிசி பரிசு வழங்கி வருகிறது. இதன்படி நம்பர்-1 இடத்தில் உள்ள அணியான இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியதன் மூலம், நம்பர்-1 இடத்தை தக்க வைத்து கொண்டது.
இதன் மூலம் ஐசிசியின் ரூ. 6. 5 கோடி பரிசை வென்றது. இதனிடையே தரவரிசையில் 3வது இடத்தில் இருந்த தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியிருப்பதன் மூலம், இன்று 2வது இடத்திற்கு முன்னேறியது.
இதன் மூலம் தென் ஆப்ரிக்காவுக்கு ஐசிசியின் ரூ. 3. 25 கோடி பரிசாக கிடைக்க உள்ளது. 2வது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியா, ஐசிசியின் பரிசை பெறுவதற்கான கடைசி நேரத்தில் 3வது இடத்திற்கு பின்தங்கியதால் வெறும் ரூ. 1. 30 கோடியை மட்டுமே பெறும்.