விரைவில் பங்கு வெளியீடு; சந்தைக்கு வரும் இரு நிறுவனங்கள்
புதுடில்லி : அயு பைனான்சியர்ஸ், பி.எஸ்.பி., புராஜக்ட்ஸ் நிறுவனங்கள், விரைவில், பங்கு வெளியீட்டின் மூலம் நிதி திரட்ட உள்ளன.
ராஜஸ்தானைச் சேர்ந்த, அயு பைனான்சியர்ஸ், வங்கி சாரா நிதி நிறுவனமாக திகழ்கிறது. பி.எஸ்.பி., புராஜக்ட், கட்டுமான துறையில் ஈடுபட்டு வருகிறது. இந்த இரு நிறுவனங்களும், பங்கு வெளியீட்டின் மூலம் நிதி திரட்ட உள்ளன.இதையடுத்து, இந்நிறுவனங்கள், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தன. இதற்கு, செபி ஒப்புதல் அளித்ததை அடுத்து, இந்நிறுவனங்கள், விரைவில் பங்குகளை சந்தையில் வெளியிட உள்ளன. இதன் மூலம் இவை, 800 – 1,000 கோடி ரூபாய்க்கு நிதி திரட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து, அயு பைனான்சியர்ஸ் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பங்கு வெளியீட்டில் திரட்டும் நிதி, நிறுவனத்தின் சந்தை பங்களிப்பை அதிகரிக்கும் பணிகளுக்கு செலவிடப்படும்’ என்றார். பி.எஸ்.பி., நிறுவனத்தின் பங்கு வெளியீட்டு பணிகளை, கார்வி இன்வெஸ்ட்டார் சர்வீசஸ், மோதிலால் ஆஸ்வால் ஆகியவை மேற்கொள்ள உள்ளன.