இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டி கைவிடப்பட்டது!
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி மழைக் காரணமாக கைவிடப்பட்டது.
இந்த போட்டியில் இலங்கை அணி துடுப்பெடுத்தாடியதன் பிறகு பெய்த கடும் மழையின் காரணமாக போட்டி இரவு 8.45 மணியளவில் போட்டி இடைநிறுத்தப்பட்டது.
இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்களாதேஷ் அணி 1-0 என முன்னிலை வகிப்பதுடன், இலங்கை அணி தொடரை சமனிலை செய்வதற்கு அடுத்த போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.