பாரிய தீவிபத்து - குழந்தைகள் படுகாயம் - ஒருவர் பலி!!
நேற்றிரவு ஸ்ரார்ஸ்பேர்க் நகரின் Neuhof பகுதியில் பாரிய தீவிபத்து ஒன்று நடந்துள்ளது. இதில் ஒருவர் கொல்லப்பட, ஏழுபேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 6 மற்றும் 7 வயதுடைய பிள்ளைகளும் அடங்குவார்கள்.
நேற்றிரவு 20h15 அளவில், இந்தப் பகுதியில் உள்ள ஐந்;து மாடிக் குடியிருப்புக் கட்டடத்தில் தீப்பற்றிக் கொண்டுள்ளது. தீயைணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட தீயணைப்புப் படையினர், படுகாயமடைந்தவர்களை மீ;ட்டுள்ளனர். இதில் மிகவும் மோசமான நிலையில் இருந்த மூவர், உலங்கு வானூர்தி மூலம் மெட்ஸ் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இதில் மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர். இதில் 6 மற்றும் 7 வயதுடைய பிள்ளைகளும் அடங்குவார்கள்.
குற்றத்தடுப்புப் பிரிவினர், இந்தத் தீக்கான காரணத்தை அறிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.