லாக்கூர்நெவ் - இளம்பெண்ணைக் கொன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர்!!

PARIS TAMIL  PARIS TAMIL
லாக்கூர்நெவ்  இளம்பெண்ணைக் கொன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர்!!

ஒரு இளம்பெண்ணைப் படுகொலை செய்த குற்றத்திற்கான விசாரணை, ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த ஐந்து பேர் மீது, பொபினி குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது.
 
2013 ஆம் ஆண்டு லாக்கூர்நெவ், பூங்காவில் இந்த இளம்பெண்ணின் உடலம் துண்டு, துண்டாக வெட்டப்பட்ட நிலையில், காவற்துறையினரால் கண்டெடுக்கப்பட்டிருந்தது.
 
இதன் நீண்ட விசாரணையின் பின்னரே, கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இவர்கள் ஐந்து பேரும் ஒரே குடும்பத்தினைச் சேரந்தவர்கள் என்பது அதிர்ச்சிக்குரியது.
 
 
 
இதில் ஒருவர் நேரடியாகக் கொலையைச் செய்துள்ளார். இன்னுமொருவர் இந்தப் பெண்ணின் உடலத்தை; துண்டு துண்டாக வெட்டியுள்ளார். மற்றைய மூவரும் அனைத்துத் தடயங்களையும் குற்றம் நடந்த இடத்தில் அழித்துள்ளனர். காவற்துறையினரின் விசாரணைப் பிரிவினர் அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளனர்.
 
 
இவர்கள் மீதூன விசாரணைகள், கடந்த மூன்று நாட்களாக நடந்து வருகின்றன.
 

மூலக்கதை