டேவிஸ் கோப்பை டென்னிஸ் செப்டம்பரில் கனடாவுடன் மோதுகிறது இந்தியா

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: டேவிஸ் கோப்பை டென்னிஸ் உலக பிரிவு பிளே ஆப் சுற்றில், இந்தியா - கனடா அணிகள் மோதும் போட்டி செப்டம்பர் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எட்மான்டன், நார்த்லேண்ட்ஸ் உள்ளரங்கு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள இந்த போட்டி செப். 15ம் தேதி தொடங்கி 17ம் தேதி வரை நடைபெறும். இதில் வெற்றி பெறும் அணி ‘எலைட்’ பிரிவுக்கு தகுதிஉயர்வு பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி கடைசியாக 2011ம் ஆண்டு உலக பிரிவுக்கு முன்னேறி உள்ளதி. அதில் செர்பியாவிடம் முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறியது. அதற்கு முன்பாக 1996ல் எலைட் பிரிவுக்கு தகுதி பெற்ற இந்தியா கால் இறுதி வரை முன்னேறி ஸ்வீடனிடம் போராடி தோற்றது.

மூலக்கதை