பதவி விலகினார் இராணுவ அமைச்சர்!!
இராணுவ அமைச்சர் சில்வி குலார் (Sylvie Goulard), தான் பதிவி விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார், பாராளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், தனது பதவி விலகல் கடிதத்தினை, பிரதமரிடமும் ஜனாதிபதியிடமும் வழங்கி உள்ளதாக இராணுவ அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாளை புதிய அமைச்சரவை உருவாக்கப்படும் நிலையில், இந்த அரசாங்கத்தில் தான் அங்கம் வகிக்க விரும்பவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் MoDem கட்சி அங்கத்தவரும், எமானுவல் மக்ரோனின் விசுவாசியுமான சில்வி குலார், Modem கட்சியினர் மீது ஒரு புதிய ஊழற்குற்றசாட்டு எழுந்துள்ளதாகவும் அதற்குத் தான் முகம் கொடுக்கத் தயாராக உள்ளதாகும், அதற்குத் தான் நேர்மையாகத் தனியாளாக முகம் கொடுக்க வேண்டும் என்றும், அதற்காகத் தான் பதவி விலகுவதாகவும் தெரிவித்துள்ளார்.