இந்தோனேசிய ஒபன் பேட்மின்டன் ஸ்ரீகாந்த் சாம்பியன்

தினகரன்  தினகரன்

ஜகார்தா: இந்தோனேசிய ஓபன் சூப்பர் சீரீஸ் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் ஜப்பானின் கஸுமாசா சகாயுடன் (47வது ரேங்க்) நேற்று மோதிய ஸ்ரீகாந்த் (22வது ரேங்க்) 21-11 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டில் சகாய் கடும் நெருக்கடி கொடுத்த நிலையில், உறுதியுடன் விளையாடிய ஸ்ரீகாந்த் 21-11, 21-19 என்ற நேர் செட்களில் வென்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.இப்போட்டி 37 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. 2014ல் சீன ஓபனில் வென்றிருந்த ஸ்ரீகாந்த், தற்போது 2வது முறையாக சூப்பர் சீரீஸ் பேட்மின்டன் தொடரில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.

மூலக்கதை