ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பயிற்சி ஆட்டம்: இந்திய அணிக்கு 190 ரன்கள் வெற்றி இலக்கு

தினகரன்  தினகரன்

ஓவல்: இந்திய அணியுடனான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 190 ரன்கள் குவித்துள்ளது. லண்டன், ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. நியூசிலாந்து அணி 38.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 189 ரன் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரோஞ்சி 66, ஜேம்ஸ் நீஷம் 46 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் இந்திய அணி பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசி முகமது ஷமி, புவனேஸ்வர் குமார் 3, ஜடேஜா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய களமிறங்க உள்ளது.

மூலக்கதை