பங்கு சந்தையில் பெருகும் முதலீடுகள்; ரூ.20,000 கோடி திரட்ட நிறுவனங்கள் திட்டம்

தினமலர்  தினமலர்
பங்கு சந்தையில் பெருகும் முதலீடுகள்; ரூ.20,000 கோடி திரட்ட நிறுவனங்கள் திட்டம்

புதுடில்லி : இந்­திய நிறு­வ­னங்­கள், வரும் மாதங்­களில், புதிய பங்கு வெளி­யீ­டு­கள் மூலம், 20 ஆயி­ரம் கோடி ரூபாய் திரட்ட உள்ளன.
மத்­திய அர­சின் நட­வ­டிக்­கை­க­ளால், நாட்­டின் பொரு­ளா­தா­ரம், நிலை­யான வளர்ச்­சியை கண்டு வரு­கிறது; பண­வீக்­க­மும் கட்­டுக்­குள் உள்­ளது. பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான, ‘செபி’ பல்­வேறு கட்­டுப்­பா­டு­களை அமல்­ப­டுத்தி, நிதிச் சந்தை முத­லீ­டு­க­ளுக்கு, பாது­காப்­பான சூழலை ஏற்­ப­டுத்தி உள்­ளது. இது போன்ற கார­ணங்­க­ளால், பங்­குச் சந்­தை­களில் முத­லீ­டு­கள் பெருகி வரு­கின்றன. இத்­த­கைய சூழலை பயன்­ப­டுத்தி, விரி­வாக்­கத் திட்­டங்­கள், நடை­முறை மூல­தன தேவை போன்­ற­வற்­றுக்­கான நிதியை திரட்ட, பல நிறு­வ­னங்­கள், புதிய பங்கு வெளி­யீ­டு­களை மேற்­கொள்ள திட்­ட­மிட்டு உள்ளன.
இந்த வகை­யில், தேசிய பங்­குச் சந்­தை­யான, என்.எஸ்.இ., – ஹட்கோ, சி.டி.எஸ்.எல்., – நக் ஷத்­திரா வேர்ல்டு, கொச்­சின் ஷிப்­யார்டு உள்­ளிட்ட நிறு­வ­னங்­கள், வரும் மாதங்­களில், புதிய பங்­கு­களை வெளி­யிட உள்ளன. இவற்­றுள், ஹட்கோ, சி.டி.எஸ்.எல்., – எஸ்.சந்த் அண்டு கம்­பெனி, ஜென­சிஸ் கலர்ஸ், செக்­யூ­ரிட்டி அண்டு இன்­டெ­லி­ஜன்ஸ் சர்­வீ­சஸ் ஆகிய ஐந்து நிறு­வ­னங்­களின், பங்கு வெளி­யீ­டு­க­ளுக்கு, செபி அனு­மதி அளித்­துள்­ளது.
இத்­து­டன், ஜி.டி.பி.எல்., – ஹாத்வே, என்.எஸ்.இ., – பாரத் ரோடு நெட்­வொர்க், தேஜாஸ் நெட்­வொர்க்ஸ், இரிஸ் லைப்­ச­யன்­சஸ், சல­சர் டெக்னோ இன்­ஜி­னி­ய­ரிங், ஏ.யு., பைனான்­சி­யர்ஸ், பிர­தாப் ஸ்நாக்ஸ், பி.எஸ்.பி., புரா­ஜெக்ட்ஸ் ஆகிய நிறு­வ­னங்­களும், பங்­கு­களை வெளி­யிட்டு, நிதி திரட்ட உள்ளன.விரை­வில், இந்­நி­று­வ­னங்­களின் பங்கு வெளி­யீட்­டிற்கு செபி அனு­மதி அளிக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.
இதை­ய­டுத்து, வரும் மாதங்­களில், புதிய பங்கு வெளி­யீ­டு­களின் மூலம், நிறு­வ­னங்­கள், 20 ஆயி­ரம் கோடி ரூபாய் வரை திரட்­டும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது.இதில், என்.எஸ்.இ., நிறு­வ­னம் மட்­டும், 10 ஆயி­ரம் கோடி ரூபாய் திரட்ட வாய்ப்­புள்­ள­தாக, சந்­தை­யா­ளர்­கள் தெரி­விக்­கின்­ற­னர்.

அதிக வர­வேற்புஆறு ஆண்­டு­க­ளுக்­குப் பின், 2016ல், புதிய பங்கு வெளி­யீ­டு­க­ளுக்கு முத­லீட்­டா­ளர்­க­ளி­டம் அதிக வர­வேற்பு காணப்­பட்­டது; 26 நிறு­வ­னங்­கள், புதிய பங்கு வெளி­யீ­டு­கள் மூலம், 26ஆயி­ரம் கோடி ரூபாய் திரட்­டி­யுள்ளன. இந்­தாண்டு, இது­வரை, பி.எஸ்.இ., – அவென்யூ சூப்­பர்­மார்ட்ஸ் உள்­ளிட்ட, ஐந்து நிறு­வ­னங்­கள், பங்கு வெளி­யீட்டை மேற்­கொண்­டுள்ளன.
கவர்ச்­சி­க­ர­மான விலை­யில், புதிய பங்­கு­களை வெளி­யிட்­டால், முத­லீட்­டா­ளர்­களின் ஆத­ரவு கிட்­டும். அப்­பங்­கு­கள் விலை, பங்­குச் சந்­தை­யில் பட்­டி­ய­லி­டப்­படும் போது, உயர வாய்ப்­புள்­ளது என்ற அடிப்­ப­டை­யில், முத­லீ­டு­கள் குவி­யும்.பங்கு விலையை அதி­க­மாக நிர்­ண­யித்­தால், பங்­குச் சந்­தை­யில் பட்­டி­ய­லி­டும் போது, அப்­பங்­கு­கள் விலை, அதி­கம் உய­ராது என்ற அனு­மா­னத்­தில், அவற்­றில் முத­லீடு செய்ய, முத­லீட்­டா­ளர்­கள் தயங்­கு­வர்.-ஐ.வி.சுப்­ர­ம­ணி­யம், இயக்­கு­னர், குவாண்­டம் ஏ.எம்.சி.,

மூலக்கதை