வித்ரியில் துப்பாக்கி முனையில் வாகனம் - நூறு கிலோமீற்றர்கள் துரத்தல்!!

PARIS TAMIL  PARIS TAMIL
வித்ரியில் துப்பாக்கி முனையில் வாகனம்  நூறு கிலோமீற்றர்கள் துரத்தல்!!

வித்ரியில் நடந்த ஒரு சிற்றுந்துத்திருட்டு, நாறு கிலோமீட்டர்கள் தாண்டிச் சென்றுள்ளது. வல்-து-மார்னில் உள்ள வித்ரியில், இன்று அதிகாலை 1h45 அளவில் Range Rover Evoque 4X4 வாகனம் ஒன்று துப்பாக்கி முனையில் திருடப்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் இந்த வாகனத்தை இலக்கு வைத்த காவற்துறையினர் அதனைத் துரத்தி நிறுத்த முயன்றுள்ளனர்.
 
வல்-து-மார்ன் மற்றும் செய்ன்-சன்-தனியின் குற்றத்தடுப்புப் பிரிவினரும் இந்தத் துரத்தலில் இணைந்து கொண்டனர். ஆனாலும் அந்த வாகனத்தை இவர்களால் நிறுத்த முடிந்திரக்கவில்லை. வல்துமார்னில் தொடங்கிய இந்தத் துரத்தல் வேட்டை, கிட்டத்தட்ட நாறு கிலோமீற்றர்கள் தாண்டி Roye (Somme) வில் முடிவடைந்துள்ளது.
 
இங்கு வைத்து, இந்த வாகனத்தைக் கடத்திச் சென்ற நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் Roye ஜோந்தார்மினரால் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
 
அதேநேரம் இன்று அதிகாலை 4h45 அளவில், வித்ரியில் இதே வாகனத் திருடர்கள் உபயோகித்த, இன்றுமொரு Clio சிற்றுந்தும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதனுள் ஒரு மகமூடியும் துப்பாக்கியும் இருந்தமை குறிப்படத்தக்கது.
 

மூலக்கதை