கண்ணீர் விட்டு அழுத ராஜமௌலி காரணம் என்ன ?

PARIS TAMIL  PARIS TAMIL
கண்ணீர் விட்டு அழுத ராஜமௌலி காரணம் என்ன ?

 ராஜமௌலி இன்று இந்தியாவே வியந்து பார்க்கும் இயக்குனர். இவர் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் தான்.

 
அதிலும் பாகுபலி இந்திய மார்க்கெட்டை உலக அரங்கிற்கு எடுத்து சென்ற படம், இப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ம் தேதி வெளிவருகின்றது.
 
இதன் இசை வெளியீட்டு விழா நேற்று ஐதராபாத்தில் நடக்க, அங்கு திரைப்பிரபலங்கள் பலரும் கலந்துக்கொண்டனர்.
 
இதில் ராஜமௌலியை இப்படத்தின் இசையமைப்பாளர் மரகதமணி பாடலாக புகழ்ந்து மேடைக்கு அழைத்தார்.
 
மேடைக்கு வரும் போதே ராஜமௌலி அழ ஆரம்பிக்க, ஒரு கட்டத்தில் கண்ணீரை அடக்க முடியாமல் சிறுபிள்ளை போல் அழுதார்

மூலக்கதை